Tuesday, 18 August 2015

தமிழ் சொற்கள்

பிற மொழிக்கு இணையான தமிழ்ச்சொல்:
1. அதிகாரி - அலுவலர் 
2. செக் - காசோலை 
3. சக்சஸ் - வெற்றி 
4. பீரோ - இழுப்பறை 
5. லீவ்லெட்டர் - விடுமுறை கடிதம் 
6. சிட்டி - நகரம் 
7. டைப்பிஸ்ட - தட்டச்சர் 
8. ப்ரீவ் கேஸ் - குறும்பெட்டி 
9. அப்பாயின்ட் மென்ட் - பணிஅமர்த்தல் 
10. ரூம் ரெண்ட் - குடிக்கூலி 
11. மோட்டல் - பயணவழி உணவகம் 
12. காலேஜ் - கல்லூரி 
13. ஃபேன் - மின்விசிறி 
14. பிரிண்டிங் பிரஸ் - அச்சகம் 
15. ஆசீர்வாதம் - வாழ்த்து 
16. ரெக்கார்ட் - ஆவணம் 
17. ஆபிஸ் - அலுவலகம் 
18. சுவிட்சு -பொத்தான் 
19. மேஜிக் - செப்பிடுவித்தை 
20. இண்டஸ்ட்ரி - தொழிலகம் 
21. ஈசன் - இறைவன் 
22. கவர் - மறை உறை 
23. லாரி - சரக்குந்து 
24. உத்தரவு - ஆணை 
25. சேலான் - செலுத்துச்சீட்டு 
26. எஸ்டிமேட் - மதிப்பீடு 
27. கண்ட்ரி - நாடு 
28. பர்னிச்சர் - அறைக்கலன்கள் 
29. அலங்காரம் - ஒப்பனை 
30. மீட்டிங் - கூட்டம் 
31. ஏஜென்ட் - முகவர் 
32. டிக்ஷ;னரி - அகராதி 
33. லாண்டரி - வெளுப்பகம் 
34. கேரண்டி - பொறுப்புறுதி 
35. டிபன் - சிற்றுண்டி 
36. கண்ட்ரோல் - கட்டுப்பாடு 
37. குமாரன் - மகன் 
38. டிசைன் - வடிவமைப்பு 
39. தம்ளர் - குவளை 
40. சாம்பியன் - வாகை சூடி 
41. கம்பெனி - குழுமம் 
42. ஸ்டேடியம் - விளையாட்டரங்கம் 
43. வொர்க்ஷhப் - பணிமனை 
44. ஆக்ஸிடென்ட் - நேர்ச்சி 
45. இம்ப்ரூ - பெருக்கு 
46. ஸ்பீக்கர் - பேசுபவர் 
47. பஸ் ஸ்டாண்டு - பேருந்து நிலையம் 
48. சினிமா - திரைப்படம் 
49. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் - பல்பொருள் அங்காடி
50. ஆடியோகேசட் - ஒலிப்பேழை 
51. சட்ஜ்மெண்ட் - தீர்ப்பு 
52. வோல்டு - உலகம் 
53. ரயில் - தொடர்வண்டி 
54. ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல் 
55. பாக்கி - நிலுவை 
56. அசெம்ளி - சட்டசபை 
57. ஃபுட் போர்டு - படிக்கட்டு 
58. குஃவோடா - பங்கு 
59. கலெக்டர் - சேகரிப்பவர் 
60. போஸ்ட் ஆபிஸ் - அஞ்சல் நிலையம் 
61. அஸ்ட்ரோநோமி - வானநூல் 
62. ஆட்டோமொபைல் - தானியங்கி 
63. தியேட்டர் - திரை அரங்கு 
64. அட்லஸ் - நிலப்படத்தொகுப்பு 
65. ஃபேக்நியூஸ் - பொய்ச்செய்தி 
66. அட்லஸ் - நிலப்படச்சுவடி 
67. ஆபத்து - இடர் 
68. ஆயில் ஸ்டோர் - எண்ணெய்ப் பண்டகம் 
69. ஃபிளாஷ; நியூஸ் - சிறப்புச் செய்தி 
70. ஆயுசு - வாழ்நாள் 
71. ப்ரொஜெக்டர் - படவீழ்த்தி 
72. ஜனங்கள் - மக்கள் 
73. அடாப்டர் - பொருத்தி 
74. ஸ்கூல் - பள்ளி 
75. டீ - தேநீர் 
76. பேங்க் - வங்கி 
77. அந்நியர் - அயலார் 
78. பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு 
79. கரஸ்பாண்டேன்ட் - தாளாளர் 
80. அபூர்வம் - புதுமை 
81. லைசன்ஸ் - உரிமம் 
82. கேபிள் - கம்பிவடம் 
83. ஓட்டல் - உணவகம் 
84. டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் - தட்டெழுத்துப் பயிலகம் 
85. பேக்கிங் சார்ஜ் - கட்டுமானத்தொகை 
86. டெய்லி - அன்றாடம் 
87. இன்டர்நெட் - இணையம் 
88. ப்ரீப்கேஸ்- குறும்பெட்டி 
89. பிளாட்பாரம் - நடைபாதை 
90. அட்மிஷன் - சேர்க்கை 
91. டிசிப்ளின் - ஒழுக்கம் 
92. ஜெராக்ஸ் - ஒளிப்படி 
93. இலஞ்சம் - கையூட்டு 
94. பாய்லர் - கொதிகலன் 
95. டிக்கெட் - பயணச்சீட்டு 
96. சயின்ஸ் - அறிவியல் 
97. புரபோசல் - கருத்துரு 
98. டிவி - தொலைக்காட்சி 
99. ஏரோப்ளேன் - வானூர்தி 
100. கம்ப்யூட்டர் - கணினி 
101. தெர்மா மீட்டர் - வெப்பமானி 
102. கம்பெனி - குழுமம் 
103. சென்ட்ரல் கவர்ன்மென்ட் - நடுவன் அரசு 
104. மதர்லேண்ட் - தாயகம் 
105. விஞ்ஞானம் - அறிவியல் 
106. சாவி - திறவுகோல் 
107. ரேடியோ - வானொலி 
108. ரிஜிஸ்டர் போஸ்ட் - பதிவு அஞ்சல் 
109. உபயோகம் - பயன் 
110. ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம் 
111. ரிப்பைரர் - பழுதுபார்ப்பவர் 
112. ஸ்டேசனரி சாப் - எழுது பொருள் அங்காடி 
113. புல்லட்டின் - சிறப்புச் செய்தி இதழ் 
114. டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி 
115. மெடிக்கல் ஷhப் - மருந்தகம் 
116. கிரீடம் - மணிமுடி 
117. கிரீன் ப்ரூஃ - திருத்தப்படாத அச்சுப்படி 
118. இலாபம் - வருவாய் 
119. பெல்ட் - அரைக்கச்சு 
120. ஃபோலியோஎண் - இதழ் எண் 
121. புரோநோட் - ஒப்புச்சீட்டு 
122. ஸ்பெஷல் - தனி 
123. ஸ்டேட் கவர்ன்மென்ட் - மாநில அரசு 
124. ஐஸ்- கிரீம் - பனிக்குழைவு 
125. பால்கனி - முகப்பு மாடம் 
126. மெஸ் - உணவகம் 
127. கிளாத் ஸ்டோர்ஸ் - துணியங்காடி 
128. மார்க்கெட் - அங்காடி 
129. கோட்டல் - உணவகம் 
130. லே அவுட் - செய்தித்தாள் வடிவமைப்பு 
131. டீப் போர் வெல் - ஆழ்துளைக் கிணறு 
132. என்வெரான்மென்ட் - சுற்றுச்சூழல் 
133. பல்பு - மின்குமிழ் 
134. காகிதம் - தாள் 
135. பிளைட் - விமானம் 
136. பேரண்ட்ஸ் - பெற்றோர் 
137. டீ பார்ட்டி - தேநீர் விருந்து 
138. டெலஸ்கோப் - தொலைநோக்கி 
139. எவர்சில்வர் - நிலைவெள்ளி 
140. விசிட்டிங்கார்டு - காண்டிச்சீட்டு 
141. ஹேர்கட்டிங் சலூன் - முடித்திருத்தகம் 
142. கிரைண்டர் - அரவை இயந்திரம் 
143. உஷhர் - விழிப்பு 
144. நோட்புக் - குறிப்பேடு 
145. பார்லிமென்ட் - நாடாளுமன்றம் 
146. காபி பார் - குளம்பியகம் 
147. டிமாண்ட் டிராப்ட் - வரைவோலை 
148. டீ ஸ்டால் - தேநீர் அங்காடி 
149. எடிட்டோரியல் - தலையங்கம் 
150. புஷ;பம் - மலர் 
151. ஆராதனை - வழிபாடு 
152. மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி 
153. பைக் - விசையுந்து 
154. இண்டஸ்ட்ரி - தொழிலகம் 
155. ப்ரஷ; - தூரிகை 
156. பர்ஸ்ட் கிளாஸ் - முதல் வகுப்பு 
157. புனல் - வடிகுழலி 
158. யுனிவர்சிட்டி - பல்கலைகழகம் 
159. பயாலாஜி - உயிரியல் 
160. ஸ்டேஷனரி ஷhப் - எழுதுபொருள் அங்காடி 
161. அபிஷேகம் - நீராட்டு 
162. கலெக்டர் - ஆட்சியர் 
163. அதிபர் - தலைவர் 
164. ஹெலிகாப்டர் - சுருள் வானூர்தி 
165. சர்ஜரி - அறுவைச் சிகிச்சை 
166. போலீஸ் ஸ்டேஷன் - காவல் நிலையம் 
167. செக் - காசோலை 
168. ஐடென்டிபிகேஷன் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ் 
169. நாலெட்ஜ் - அறிவு 
170. சாக்பீஸ - சுன்னக்கட்டி 
171. ஜட்ஜ் - நீதிபதி 
172. கவுன்சில் - மன்றம் 
173. நிபுணர் - வல்லுநர் 
174. ஐஸ்வாட்டர் - குளிர்நீர் 
175. காஸ்ட்யூம் - உடை 
176. பஸ் ஸ்டாப் - பேருந்து நிறுத்தம் 
177. மைக் - ஒலிவாங்கி 
178. ஒன் வே- ஒருவழிப்பாதை 
179. கெஸ்ட் கவுஸ் - விருந்தகம் 
180. ஏஜென்சி - முகவாண்மை 
181. பைண்டிங் - கட்டமைப்பு 
182. சைக்கிள் - மிதிவண்டி 
183. இண்டர்வ்யூ - நேர்காணல் 
184. நஷ;டம் - இழப்பு 
185. பிரிசன் - சிறைச்சாலை 
186. போனஸ் - மகிழ்வூதியம் 
187. அங்கத்தினர் - உறுப்பினர் 
188. உத்தியோகம் - பணி 
189. பைல் - கோப்பு 
190. ஆஸ்பத்திரி - மருத்துவமனை 
191. வீடியோகேசட் - ஒளிப்பேழை 
192. ரப்பர் - தேய்ப்பம் 
193. டைரி - நாட்குறிப்பு 
194. லைசென்ஸ் - உரிமம் 
195. காம்பாக்ட் டிஸ்க் - வட்டத்தகடு 
196. சிலிண்டர் - உருளை 
197. உயில் - இறுதிமுறி 
198. கிரீன் ரூம் - பாசறை 
199. ஆர்டர் ஆஃப் நேச்சர் - இயற்கை ஒழுங்கு 
200. ஐதிகம் - உலக வழக்கு 
201. அஸ்தெடிக் - இயற்கை வனப்பு 
202. ஜெராக்ஸ் - ஒளிப்படி 
203. கிளாசிக்கல் லாங்குவேஜ் - உயர்தனிச் செம்மொழி 
204. ராக்கெட் - ஏவுகணை 
205. கெலிகாப்டர் - உலங்கு வானூர்தி 
206. அகாதெமி - கழகம் 
207. கூல் டிரிங்ஸ்- குளிர்பருகு நீர் 
208. பாஸ்ப்போர்ட் - கடவுச்சீட்டு 
209. சூப்பர் - சிறப்பு 
210. லிவ்வர் - கல்லீரல் 
211. டெலிபோன் - தொலைபேசி 
212. கரண்ட் - மின்சாரம் 
213. ட்ராவலர்ஸ் பங்களா - பயணியர் மாளிகை 
214. பிரிட்ஜ் - குளிர்சாதனப்பெட்டி 
215. லேட் - காலம் கடந்து 
216. ஜங்ஷன் - கூடல் 
217. வாஷிங் மெஷின் - சலவை இயந்திரம் 
218. அட்டெண்டன்ஸ் - வருகைப்பதிவு 
219. ரோடு - சாலை 
220. லைட் - விளக்கு 
221. கவுன்சில் - குழு 
222. செல்போன் - கைப்பேசி 
223. புரோட்டோகால் - மரபுத் தகவு 
224. கூல்ட்ரிங்க்ஸ் - குளிர்பானம் 
225. ஜீப் - கரட்டுந்து 
226. வெரிபிகேஷன் - சரிபார்த்தல் 
227. உபசரித்தல் - விருந்தோம்பல் 
228. பிளாஸ்டிக் - நெகிழி 
229. கார் - மகிழுந்து 
230. சேர் - நாற்காலி 
231. கோர்ட் - மன்றம் 
232. பிக்னிக் - சிற்றுலா 
233. பிளே கிரவுண்ட் - விளையாட்டுத்திடல் 
234. டெட்லைன் - குறித்தகாலம் 
235. பேட்மிட்டன் - பூப்பந்து 
236. ஆதவன் - ஞாயிறு 
237. ஸ்நாக்ஸ் - சிற்றுணவு 
238. குபேரன் - பெருஞ்செல்வன் 
239. லெமினேஷன் - மென்தகடு 
240. டாக்டர் - மருத்துவர் 
241. பேக்கர் - ரொட்டி சுடுபவர் 
242. டிஸ்க் - குறுந்தகடு 
243. நம்பர் - எண் 
244. பேனா - தூவல் 
245. ரிவர் - நதி 
246. பஸ் - பேருந்து 
247. காண்ட்ரக்ட் - ஒப்பந்தம் 
248. இருதயம் - நெஞ்சகம் 
249. ஸ்டோர் - பண்டகம்⁠⁠⁠⁠


தமிழில் 
டீ "தேநீர்', 
காபி "குளம்பி' 
சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு

++++++++++++++++++++++++++++++++++++
கொச்சை சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்.
அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் - நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசரமாக - உடனடியாக, விரைவாக
அவஸ்தை - நிலை, தொல்லை
அற்பமான - கீழான, சிறிய
அற்புதம் - புதுமை
அனுபவம் - பட்டறிவு
அனுமதி - இசைவு
ஆச்சரியம் - வியப்பு
ஆக்ஞை - ஆணை, கட்டளை
ஆட்சேபணை - தடை, மறுப்பு
ஆதி - முதல்
ஆபத்து - இடர்
ஆமோதித்தல் - வழிமொழிதல்
ஆயுதம் - கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலோசனை - அறிவுரை
ஆனந்தம் - மகிழ்ச்சி
இஷ்டம் - விருப்பம்
இங்கிதம் - இனிமை
ஈ[தொகு]
ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை
உக்கிரமான - கடுமையான
உபசாரம் - முகமன் கூறல்
உபயோகம் - பயன்
உதாசீனம் - பொருட்படுத்தாமை
உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
உத்தரவு - கட்டளை
உல்லாசம் - களிப்பு
உற்சாகம் - ஊக்கம்
ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை
கர்ப்பக்கிருகம் - கருவறை
கர்மம் - செயல்
கலாச்சாரம் - பண்பாடு
கலாரசனை - கலைச்சுவை
கல்யாணம் - மணவினை, திருமணம்
கஷ்டம் - தொல்லை, துன்பம்
கீதம் - பாட்டு, இசை
கீர்த்தி - புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கோஷம் - ஒலி
சகலம் - எல்லாம், அனைத்தும்
சகஜம் - வழக்கம்
சகி - தோழி
சகோதரி - உடன் பிறந்தவள்
சங்கடம் - இக்கட்டு, தொல்லை
சங்கதி - செய்தி
சங்கோஜம் - கூச்சம்
சதம் - நூறு
சதா - எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் - ஓசை, ஒலி
சந்தானம் - மகப்பேறு
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சபதம் - சூளுரை
சம்சாரம் - குடும்பம், மனைவி
சம்பந்தம் - தொடர்பு
சம்பவம் - நிகழ்ச்சி
சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் - மரபு
சம்மதி - ஒப்புக்கொள்
சரணாகதி - அடைக்கலம்
சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்
சருமம் -தோல்
சர்வம் - எல்லாம்
சாதாரணம் - எளிமை, பொதுமை
சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் - சோறு
சாந்தம் - அமைதி
சாகசம் - துணிவு, பாசாங்கு
சாராமிசம் - பொருட்சுருக்கம்
சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் - விரைவின்மை
சாஸ்திரம் - நூல்
சாசுவதம் - நிலை
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கொள்கை, முடிவு
சித்திரம் - ஓவியம்
சிநேகிதம் - நட்பு
சிம்மாசனம் - அரியணை
சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
சிரமம் - தொல்லை
சின்னம் - அடையாளம்
சீக்கிரமாக - விரைவாக
சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
சுத்தமான - தூய்மையான
சுபாவம் - இயல்பு
சுலபம் - எளிது
சுவாரஸ்யமான - சுவையான
சேவை - பணி
சேனாதிபதி - படைத்தலைவன்
சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
சௌக்கியம் - நலம்
தசம் - பத்து
தத்துவம் - உண்மை
தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
தரிசனம் - காட்சி
தர்க்கம் - வழக்கு
தர்க்க வாதம் - வழக்காடல்
தாபம் - வேட்கை
திகில் - அதிர்ச்சி
திருப்தி - நிறைவு
தினசரி - நாள்தோறும்
தினம் - நாள்
தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
துரதிருஷ்டம் - பேறின்மை
துரிதம் - விரைவு
துரோகம் - வஞ்சனை
துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
தேகம் - உடல்
தேசம் - நாடு
தைரியம் - துணிவு
நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் - வணக்கம்
நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
நவீனம் - புதுமை
நவீன பாணி - புது முறை
நாசம் - அழிவு, வீண்
நாசூக்கு - நயம்
நாயகன் - தலைவன்
நாயகி - தலைவி
நிஜம் - உண்மை, உள்ளது
நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் - உறுதி
நிச்சயதார்த்தம் - மண உறுதி
நிதானம் - பதறாமை
நித்திய பூஜை - நாள் வழிபாடு
நிரூபி - மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் - மேலாண்மை
நிதி - பொருள்,செல்வம், பணம்
நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை
பகிரங்கம் - வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் - மெய்மறத்தல்
பராக்கிரமம் - வீரம்
பராமரி - காப்பாற்று , பேணு
பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை - ஆய்வு
பரிட்சை - தேர்வு
பலவந்தமாக - வற்புறுத்தி
பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் - வன்முறை
பாணம் - அம்பு
பாதம் - அடி
பாரம் - சுமை
பால்யம் - இளமை
பிம்பம் - நிழலுரு
பிரகாசம் - ஒளி, பேரொளி
பிரகாரம் - சுற்று
(அதன்)பிரகாரம் - (அதன்)படி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசுரம் - வெளியீடு
பிரச்சினை - சிக்கல்
பிரதிநிதி - சார்பாளர்
பிரதிபலித்தல் - எதிரியக்கம்
பிரதிபிம்பன் - எதிருரு
பிரத்தியோகம் - தனி
பிரபலம் - புகழ்
பிரமாதமான - பெரிய
பிரமிப்பு - திகைப்பு
பிரயோகி - கையாளு
பிரயோசனம் - பயன்
பிரவாகம் - பெருக்கு
பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை - தொழுகை,
பிரியம் - விருப்பம்
பிரேமை - அன்பு
பீடிகை - முன்னுரை
புண்ணியம் - நல்வினை
புத்தி - அறிவு
புத்திரன் - புதல்வன்
புனிதமான - தூய
புஷ்பம் - மலர், பூ
புஜபலம் - தோள்வன்மை
பூஜை - வழிபாடு
பூர்த்தி - நிறைவு
பூஷணம் - அணிகலம்-
போதனை - கற்பித்தல் மகான் - பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
மத்தியானம் - நண்பகல்
மந்திரி - அமைச்சர்
மனசு - உள்ளம்
மனிதாபிமானம் - மக்கட்பற்று
மானசீகம் - கற்பனை
மல்யுத்தம் - மற்போர்
ய[தொகு]
யந்திரம் - பொறி
யூகம் - உய்த்துணர்தல்
யூகி - உய்த்துணர்
யோக்யதை - தகுதி
ர[தொகு]
ரதம் - தேர்
ரத சாரதி- தேரோட்டி
ராணி - அரசி
ராத்திரி - இரவு
ராச்சியம் - நாடு,மாநிலம்
ராஜா - மன்னன்
ரசம் - சாறு, சுவை
லட்சம் - நூறாயிரம்
லட்சணம் - அழகு
லட்சியம் - குறிக்கோள்
வதம் - அழித்தல்
வதனம் - முகம்
வம்சம் - கால்வழி
வஸ்திரம் - துணி, ஆடை
வாஞ்சை - பற்று
வாயு - காற்று
விக்கிரகம் - வழிபாட்டுருவம்
விசாரம் - கவலை
விசாலமான - அகன்ற
விசித்திரம் - வேடிக்கை
விஷேசம் - சிறப்பு
விஞ்ஞானம் - அறிவியல்
விஷயம் - செய்தி
விதானம் - மேற்கட்டி
விநாடி - நொடி
வித்தியாசம் - வேறுபாடு
விபூதி - திருநீறு , பெருமை
விமோசனம் - விடுபடுதல்
வியாதி - நோய்
விரதம் - நோன்பு
விவாகம் - திருமணம்
விவாதி -வழக்காடு
வேகம் - விரைவு
வேதம் - மறை
வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
வேதியர் - மறையவர்
ஜ[தொகு]
ஜனநாயகம் - குடியாட்சி
ஜனம் - மக்கள்
ஜனனம் - பிறப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் - வேடிக்கை
ஜூரம் - காய்ச்சல்
ஜோதி - ஒளி
ஜோடி - இணை
ஜோடித்தல் - அழகு செய்தல்
ஸந்ததி - கால்வழி
ஸமத்துவம் - ஒரு நிகர்
ஸமரசம் - வேறுபாடின்மை
ஸமீபம் - அண்மை
ஸம்ஹாரம் - அழிவு
ஸோபை - பொலிவு
ஸௌந்தர்யம் - பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் - இடம்
மெளனம் - பேசாமை
கவிதை-பா
கவிதைகள்-பாக்கள்
வீதி-தெரு
++++++++++++++++++
😇😇👌👌
தமிழுக்கும் ஆங்கலத்திற்கும் உள்ள ஒலி ஒத்த சொற்கள். படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.
Cash - காசு
Name - நாமம்
Vomit - ஒமட்டு
Ginger - இஞ்சிவேர்
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Knowledge / Know - ஞானம் / காண்
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit representation in Tamil)
பின்வரும் வார்தையில S எடுத்திட்டு பாத்தா, அப்படியே தமிழ் சாயல்.
Script - குறிப்பு
Speech - பேச்சு
Speed - பீடு
Sponge - பஞ்சு
Snake - நாகம்
Molecule - மூலக்கூறு
Orate - உரையாற்று
Kill - கொல்
One - ஒன்று
Eight - எட்டு
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Culprit - கள்வன்
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Mind - மதி
Surround - சுற்றம்
Water - ஊற்று
Lemon - இளமஞ்சள்காய் (எலுமிச்சை)
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Roll - உருள்
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Round - உருண்டை
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Attack - தாக்கு
Betrothal - பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)
Right - உரியது
Make - ஆக்கம்
Grain - குருணை
Button - பொத்தான்

Sunday, 12 July 2015

முதுமை

முதுமைத் தாகம்

ட்டுடல் விட்டுப் போகும், 
கணுக்களில் வலி,எ டுக்கும்; 
கொட்டிடும் முடியால் முட்டைக் 
கூடுபோல் கபால மாகும்! 
அட்டைபோல் இருந்த மீசை 
அசைவிலாப் பூரான் ஆகும்! 
பட்டுடல் சுருங்கி நிற்கப் 
பளபளப்(பு) ஒளிந்து கொள்ளும்! 

எட்டடி பாய்ந்த கால்கள் 
இரண்டடி நடந்து சோரும்! 
விட்டமும் துடைத்த தோற்றம், 
வெறுந்தரை பார்த்து நிற்கும்! 
கட்டிய மனைவி தன்னைக் 
கட்டிலில் வைத்த கைகள் 
தொட்டிட நடுங்கும் வேறு 
துணையெனத் தடி,பி டிக்கும்! 

சட்டமாய் உண்ட வாயோ, 
சட்டியில் குடிக்கக் கேட்கும்! 
முட்டவும் குடித்து விட்டால், 
மூச்சு,கீழ் மேலாய் ஓடும்! 
பட்டமும் அறுந்த தைப்போல், 
படபடப்(பு) இதயம் கொள்ளும்! 
இட்டமும் இல்லா வாழ்வு,ஏன்? 
இளமையில் கொல்,என் பேனே! 


மூப்புதான் உடலின் வண்ணம்; 
முதுமையோ மனதின் எண்ணம்! 
காப்புதான் அடக்கம் என்பர்! 
கற்றறிந் தவராம் மூப்பர்! 
சீப்புதான் எண்ணம், ஆனால் 
சிறுமுடி யேனும் தேவை! 
தோப்பெனும் நினைவால் மூப்பைத் 
தோற்றிடச் செய்கின் றேனே! 

நினைவெனும் முக்கா டிட்டு 
நிகழ்வினைக் குறைத்துக் கொண்டு 
முனைவுகள் வளர்த்துக் கொள்ள 
முதுமையைத் தள்ளிப் போட்டுப் 
புனைவுகள் செய்வ தாலே 
போகுமோ உடலின் மூப்பும்! 
மனைவியே சிலபே ருக்கு 
மந்திரம் என்று கேள்வி!

Monday, 6 July 2015

நாலடியார்

சமண முனிவர்கள் 400 பேர்  சேர்ந்து ஒரு  காலத்தை வென்ற  4 அடி பாடல்களை இயற்றினார்கள். சமணர்கள் மறைந்தாலும் அவர்கள் சமைத்த இந்த  நாலடியார்  என்றும் நிலையாக நிற்கும்.   பல்  உறுதியாக இருப்பதற்கு அந்த காலத்தில்  ஆலங் குச்சி, வேப்பங் குச்சி  உபயோகித்து பல் துலக்கினார்கள்.  பல்லை விடுங்கள், நமது சொல்லுக்கு  உறுதியாக  எதை நாம் கற்க வேண்டும் என்று ரெண்டு காவியங்களை  விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்  நமது முன்னோர்.  அவையே  நாலடியாரும் ஈரடியும்.    அதாவது  நாலடியாரும்  திருக்குறளும்.

இதில் நாலடியாரை கொஞ்சம் பார்க்கும்போது அதை  1873க்கு  முன்பே   லீபேர்  என்கிற தரங்கம்பாடி  வெள்ளைக்கார  பாதிரியார்  ஒரு  நல்லவேலை செய்திருக்கிறார்.  இதை ஆங்கிலத்தில்  மொழி பெயர்த்திருக்கிறார்.  வெள்ளைக் காரர்கள் சிலர்  நம்மைவிட  தமிழை நன்றாக  அறிந்திருந்தார்கள். நாம்  தான்  ஏனோ  அவர்கள் மொழியான  ஆங்கிலத்தை  அரைகுறையாக பிடித்துக்கொண்டு  நமது தாய் மொழியை  இரக்கமின்றி தயக்கமின்றி  வெளியேற்றிவிட்டோம்.  தாய்க்கு கொடுக்கும் மதிப்புதானே  தாய் மொழிக்கும் தருகிறோம்.

நாலடியார்  40  அத்தியாயம் கொண்டு  ஒவ்வொன்றிலும் 10 பாடல்கள்.  ஒவ்வொரு பாடலும்  4 அடி கொண்டது.

ஒரு ராஜாவின் அரண்மனையில்  8000 புலவர்கள் கூடியிருந்தனர்.  அவனது அரண்மனையில்  ஏற்கனவே  சில புலவர்கள் இருந்தனர்.  ராஜாவுக்கு  புது  மோகம் புலவர்கள்  மேல் வந்து விட்டது. இனி நாம் எதற்கு  என்று அவர்கள்  அரண்மனையை விட்டு  ராவோடு ராவாக சொல்லாமல் கிளம்பிவிட்டனர். போவதற்கு முன்பு  ஆளுக்கு  ஒரு பாடல்  ஓலைச்சுவடியில் எழுதி தங்கள் தலையணைக்கு கீழே வைத்து விட்டு  சென்றனர்.  மறுநாள்  ராஜா விஷயம் அறிந்து  அத்தனை  ஓலைச்சுவடிகளையும்  நதியில்   எறியச்சொன்னான். ஆற்று  வெள்ளத்தையும் எதிர்த்து  400 ஓலைச்சுவடிகள் மிதந்து வந்தன. ஆச்சர்யப்பட்ட ராஜா  அவற்றை பாதுகாத்து  இப்போது உங்களுக்கு  நாலடியாராக  வீட்டுக்கே  வந்து விட்டது.

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.

​இளமையோ  அதனால்  விளையும்  அழகோ  சாஸ்வதம்  என்று  எண்ணி  பெருமிதம் அடைகிறோம்.  எந்த  கண்ணாடியில்  நம்  அழகு நம்மை  பெருமிதம் கொள்ள  செய்ததோ  சில வருஷங்கள்  கழித்து  நம்மை  எப்படி காட்டப்போகிறது  என்று  நினைத்து பார்ப்பதில்லையே.  அறிஞர்கள்  இதை  சிந்திப்பார்கள்,  காதோரம் நரை தெரியும்  என்று  ​
நல்லறிவாளர்
​கள்  உணர்ந்தவர்கள்.​வயோதிகம்  வாக்கிங் ஸ்டிக்காகி  வாசலில்  கதவுக்கு  பின்னால்  சுவற்றில்  நமக்காக  சாய்ந்து கிடப்பதை ஞாபகம் கொள்பவர்கள். இளைமையிலேயே 

​பின்னால் ​
மூப்பு நிச்சயமாக வரும் என்று கருதி இளமையிலேயே துறவு
​ உணர்வு கொண்டவர்கள்.
 குற்றம் நீங்காத, நிலையற்ற இளமைப் பருவத்தில் மகிழ்ந்து வாழ்ந்தவர், முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் எழுந்திருப்பர்.
​  ஏதோ  யாருக்கோ  வரவேண்டியது தமக்கு வந்துவிட்டதாக  அதிர்ச்சி அடைந்து  அதன் காரணமாக  அதிகமாகவே  தனது  கைப் பணத்தை  டாக்டருக்கு  அளிப்பார்கள். ​



நட்புநார் அற்றன நல்லாரும் அ·கினார்
 அற்புத் தளையும் அவிழ்ந்தன - உட்காணாய்
 வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே
 ஆழ்கலத் தன்ன கலி.

​எவரெல்லாம்  நமக்கு  உகந்தவர்,  உற்ற  நண்பர்கள் என்று நம்பி  பழகினோமோ,  உபசரித்தோமோ  அந்த  பிணைப்பு  எல்லாம்  ​பொட்டலம் கட்டும்  நூலாக  
அற்றுப் போ
​ய்விட்டதே.  எந்தப் 
 பெண்களும்
​ மேல்  பாசமும்  நேசமும் கொண்டு  அவர்கள் பின்னாலேயே  சுற்றி வந்தோமே  அவர்களைக் காணோமே. எங்கே  அந்த  
 அன்
​பு?  சுற்றம் உற்றார்  என்று  பெயரில் சிலர் நம்மருகே  உண்டே  எங்கே  அவர்கள்?  
 மனத்திலே யோசித்துப் பார்! 
​   ​நடுக் 
கடலில் மூழ்கும் கப்பலில் இருப்போர்க்கு நேர்ந்த துன்பம் போலத் துன்பம் (முதுமை) வந்து விட்டது! இனி
​ எது நமக்கு  சாஸ்வதம்  என்று  இனியாவது  புரிந்துகொண்டால்  கொஞ்சமாவது 
பயன் உண்டு
​.


வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
 வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
 உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்
 நிலவார் நிலமிசை மேல்.

​எந்த  கருவியும்  வேண்டாம்.  மிக  எளிதில்  அன்றாடம்  நமக்கு  நினைவூட்ட  அந்த  ​ கெட்டிக்கார  இறைவன்  ஒரு  உபாயம்  கொடுத்து இருக்கிறான்.  நாம்  தான்  அதை  புரிந்து கொள்வதில்லை.  
 காலத்தை அளக்கும் கருவியாக விளங்கு
​கிரான்  சூரியன்.  தினமும்  சிகப்பாக  உதிக்கிறான்.  சிகப்பு  டேஞ்சர்  லைட் என்போம்.  
நாள் தவறாமல் 
​ சிவப்பாக ​
உதயமா
​கி  சூரியன்  நினைவூட்டுகிறான். அடே  மனிதா இன்று  இன்னுமொரு நாள்  இந்தா.  போனதெல்லாம்  இனி வராது.  பாசக்கயிறு  நெருங்கி வருகிறது.  உன் 
ஆயுள் 
​முடியும் முன்பே  
பிறருக்கு உதவி செய்
​.
 யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க
​ முடியாது  என்று  உணர்ந்து கொள்.  சூரியன்  குறிப்பாக  உணர்த்துவது 
- ஒரு நாள் கழிந்தது; இரு நாட்கள் கழிந்தன என ஆயுளை அளவிடுவதாக இரு
​கின்ற படியால்
,​
 வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நல்லறம் செய்து வாழவேண்டும் என்பது 
​ தான்  இந்த  பாடல் சொல்வது.


ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
 போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
 நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
 சென்றன செய்வது உரை.

​பாவம்   நாம்  இரவு பகல்  எப்பாடு பட்டாவது நிறைய  ​
செல்வத்தை விரும்பி
​ அடைந்து  அதைச் சேர்த்து 
  பலவாக்கி ​
 பெருக்கிப் 
​புதைத்து  என்று  ஏன்  சொல்கிறேன்?  புதைப்பதே  பிறருக்கு  தெரியாமல் இருக்க தானே.  இப்போது மட்டும்  என்னவாம்?  எங்கோ  ஒரு  வங்கியில்  எங்கேயோ ஒரு தேசத்தில்  மறைவாக  சேர்த்து வைத்து.  இதோ வெளியே  வரப்போகிறது என்று  சொல்லியே  பயத்தை  அவனுக்கு  அளிக்கிறதே இந்த பணம்.  

​எது ​
பெருஞ்செல்
​வம்?  நமக்கே உதவாமல் எங்கோ  மறைந்து கிடக்கும் இதுவா, தான தர்மத்தில் கிடைக்கும்  சந்தோஷமா? ​
அறத்தை மறந்து இறந்துபோவோம் நாம் என்று எண்ணாத அற்ப நெஞ்சே! 
​ கானல் நீரைத் தேடி  ஓடுகிறாய். அது உதவும்  என்று கனவு கண்டு 
ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். எனினும், 
​ நீ  சேர்த்த பணத்தை பாராமலேயே ​
உன் வாழ் நாட்கள் ஒழி
​யுமே 
! இனி நீ மறுமைக்காகச் செய்யப் போவதுதான் என்ன? சொல்!

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்
 நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
 ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
 காக்கை கடிவதோர் கோல்.

​அதோ போகிறாளே  கங்கம்மா,  கைத்தடி ஊன்றி,  இடுப்புக்கு மேல்  முதுகு  ஆடு போல்  வளைந்து தரை பார்த்த  தலையாக என்றும் குனிந்தவாறே  நடக்கிறாளே, கண் தெரியாமல்  தட்டுதடுமாறி,  காது கேளாமல்,  எண்ணற்ற நோயுடன் செல்லும் இவளை  பல வருடங்களுக்கு முன்  எத்தனை  பேர்  சுற்றினர். கண்ணே, மானே  தேனே, ​
மாந்தளிர் போலும் நிறமும், இளமையும் உடைய பெண்ணே!' என்று 
​ ​
பிதற்
​ற்றினார்களே.  அந்த  கனகம்மா  இப்படி தான்  மாறுவாள்  என்று  ஒரு கணமும்  நினைத்தார்களா? அ
றிவுடையோர், அற்ப உடம்பின் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? 
​ ​
அவ்வுடம்பில் ஈயின் சிறகு அளவான சிறிய தோல் அறுபட்டாலும், அந்த இடத்தில் உண்டான புண்ணை நோக்கி வரும் காக்கையை விரட்ட ஒரு 
​கொம்பாவது கைவசம்  வேண்டும்.  

​நாலடியாரில்  யாக்கை  நிலையாமை  ரொம்பவுமே  சொல்லப்பட்டிருக்கிறது அல்லவா?  மேலும்  பார்ப்போமா?​

தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
 மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் மீப்போர்வை
 பொய்ம்மறைய க் காமம் புகலாது மற்றதனைப்
 பைம்மறியாப் பார்க்கப் படும்¡.

​தங்க பஸ்பம் வாங்கி சாப்பிட்டு,  பாதம், முந்திரி  குங்குமப்பூ என்று விழுங்கி,     தனது சருமத்தை  சோப்பால் கழுவி  வாசனைத் ​திரவியம்  தடவி  வளர்க்கிறாயே  உன்  உடம்பை... அப்பனே   அது மேலே  நீ  பார்க்கிற  வெறும் 
தோ
​ல்.  போர்வை.  உள்ளே??  ஸ்கேன்  எடுத்து பார்,  பயந்து போவாய். எத்தனையோ 
 துளைகள் பலவாகி உள்ளே அழுக்கை மறைக்கின்ற போர்வை
​ தான்  உன் உடம்பு  என்கிற  மேல் தோல்.  இதற்கா  இத்தனை   மதிப்பும் 
பெருமையு
​ம் கொடுத்தாய்.  ஆஹா  என்ன  அழிகிய 
 இவ்வுடம்பு! 

​சொல்கிறேன் கேள்.  
மேல் போர்வை கொண்டு உள்ளிருக்கும் அழுக்கை மறைக்காமலும், ஆசை மொழி புகலாமலும் அவ்வுடம்பை 
​ரேஷன் கடைக்கு  சர்க்கரையோ,  அரிசியோ  வாங்க எடுத்துக்கொண்டு செல்லும் ​
ஒரு பையைத் திருப்பிப் பார்ப்பது போல எண்ணிப் பார்க்க வேண்டும்! (அப்போதுதான் உடம்பின் புன்மை புலப்படும்.)
​.  சமண முனிவர்களே  அசாத்தியமான  கற்பனா சக்தி உங்களுடையது.

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
 தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
 தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
 தீர்விடத்து நிற்குமாம் தீது.

​கல்ப கோடி காலம்   இருண்டு கிண்டந்த ஒரு  அறையில்  ஒரு தீபம் 
விளக்கொளி வர, அங்கே இருந்த இருள்
​ எங்கே  மாயமாக  ​
 அக
​ன்றது.   இது போலவே  தான்  
ஒருவன் செய்த தவத்தின் முன்னே
​  அவனது பல  ஜன்ம ​
பாவம் விலகும், விளக்கில் எண்ணெய் குறையும்போது, 
​ தீப ஒளி  மங்கி  ​
இருள் பரவுவது போல் நல்வினை
​  கொஞ்சம் கொஞ்சம்மாக  ​
 நீங்
​க  ஆரம்பித்தால்  மீண்டும்  பாப்பம்  தலை காட்டத் தொடங்கும்.  பிறகு  கெட்டியாக  நம்மைப் பிடித்துக் கொள்ளும்.  


நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
 தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
 சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
 பித்தா¢ன் பேதையார் இல்.

​ஆதி சங்கரர்  நாலடியாரை  நிச்சயம்  படித்திருக்க மாட்டார்.  தமிழ் தெரிந்திருக்காது.   ஆனால்  அவர்  சொல்வதை தான்  சமண முனிவர்கள்  நாலடியாரில்  சொல்கிறார்கள்.  கொஞ்சம்  வேறே மாதிரி  அவ்வளவுதான்.  

யாக்கை ​
நிலையாமையும், நோயும், மூப்பும், சாவுத் துன்பமும் இவ்வுடம்புக்கு உண்டு என 
​நிறைய  ​
ஞான
​ம் புகட்டும் ​
 நூல்களை ஆய்ந்துணர்ந்த, சிறந்த அறிவுடையோர் தமக்கு உறுதியான தவத்தைச் செய்வர். 
​  வெறும்  உப்பு சப்பற்ற ​
முடிவில்லாத இலக்கணநூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களையே விடாமல் சொல்லிக்கொண்டு 
​ ''நஹி நஹி  ரக்ஷதி டுக்ருங்கரணே ''  ஆசாமிகள்   போன்ற 
 அறிவில்லாதவர் உலகில் 
​வேறு  எங்கும் எவரும் ​
இல்லை!

மதித்திறப் பாரும் இறக்க மதியா
 மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
 ஆஈயுந் தலைமேல் இருத்தலால் அ·தறிவார்
 காயும் கதமின்மை நன்று.

​பிறர்  தம்மை  மதிக்கவேண்டும்  என்று  இரவும் பகலும் அலையும்  பல பேர்வழிகளை  நாம்  பார்க்கிறோம்.  தான் பேசினால் கைதட்டல் எதிர்பார்ப்போர்,  தனது  புகைப்படம்  எல்லா சுவற்றிலும்  சிரித்துக்கொண்டே  காட்சி தரவேண்டும் என்று  பணத்தை  வாரி இறைப்பவர்கள் முக்யமாக  ஒரு நீதியை அறியவில்லை. பிறர் மதிப்பு  என்ன  கிரீடம் உன்  தலையில்  ஏற்றி வைக்கப்போகிறது?? 

தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; 
​​ கேவலம்  ஒரு  அல்ப ஜந்துவான  ஒரு  ஈ  கூட  ஒரு  பெரிய  ராஜாவின் 
தலைமேல்
​ தனது காலை  வைத்துக்கொண்டு  உட்காருகிறது.  அதை  லட்சியம் செய்கிறானா அவன்.  அதற்கு மதிப்பு அவ்வளவு தான்.  
 அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இரு
​கிறார்கள்  என்று  புரிந்து கொள்வோம்.


தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
 கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
 அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
 முடிகிற்கும் உள்ளத் தவர்.

​கெட்ட  நேரம்  வந்து விட்டால்,  ​
ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் நெருங்கி மிகவும் அவமதிப்பு 
​ நாலா  பக்கத்திலிருந்து வருகிறது.  நல்ல நேரம் வந்தபோது  ஓஹோ  என்று  வாழ்ந்தோம்.  இப்போது வேறு  நிலைமை.  ஆகட்டுமே  அதனால் என்ன. வந்தது வரவில் வைப்போம். சென்றதை செலவில் வைப்போம் என்ற  மன நிலையோடு  எந்த இடர் ​
வந்த போதிலும், அதற்குக் கலங்காது எடுத்த கா
​ரி
யத்தை நிறைவேற்றும் மனவலிமை மிக்கவர்
​  அறிஞர்கள். 

சிறிதே இடர் கண்டபோதெல்லாம் சினத்தை
​ வெளிக்காட்டி  உயிரையும்  சில சமயம்  விட்டு  அழிபவர்கள்  சிறியோர்.  பொறுத்தார்  பூமியாள்வார். 
மனவலிமைமிக்கவர் கண்டதற்கெல்லாம் சினம் கொள்ளாமல் சாந்தமாயிருப்பர். .

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
 பேதையோடு யாதும் உரையற்க - பேதை
 உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
 வழுக்கிக் கழிதலே நன்று.

​ஹே   ராஜாவே,  ​
மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.
​  ராஜாவுக்கு  சமண முனிவர்கள்  உபதேசம் செய்கிறார்கள்.  இப்போதெல்லாம்  மந்திரிகள்  அதிகாரிகள்   ராஜாவுக்கு  இதை சொல்கிறார்கள்.  ராஜாக்கள்  யார்.  நாம் தான்.  மக்களே  இந்த நாட்டு மன்னர்கள் அல்லவா?  அவர்கள் சொல்லி  நமக்கு புரியாவிட்டால்  நமக்கு  தீங்கில்லை.   நமக்கு  தான்  அவர்கள்  சொல்லாமலேயே   அனேக  தீங்குகள்  வரிசையாக  அங்கிருந்து வருகின்றனவே.

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
 தா¡¢த் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
 புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
 சமழ்மையாக் கொண்டு விடும்.

​அவன் கிடக்கிறான்  முட்டாள்.  அவனுக்கு தெரிந்தது  அவ்வளவு  தான்.  லட்சியம் பண்ணாதே அவன் சொன்னதை  என்று சொல்கிறோமே  அது சம்பந்தப் பட்டது  இது.  

நற்குணமில்லாதவர் பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்! அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்கு
​றி
ய செயலாகக் கொள்ளாது; பழிக்கு
​றி
ய செயலாக
​த்தான் ​
கருதும்.

Saturday, 4 July 2015

இரு சொல் காவியங்கள்

கண்ணதாசனின், இரு சொல் விந்தைகள்!

kannadasan-mgr
எம்.ஜி.ஆருடன் கண்ணதாசன்

தமிழில் சுருங்கச் சொல்லி விளங் வைத்தல்!
தமிழின்  ஏராளமான சிறப்புக்களில் ஒன்று, எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். நுட்பமான கருத்துக்களை, ஆழ்ந்த தத்துவங்களை சிறு சொற்களால் கூறி விளங்க வைக்கும் மொழி உலக மொழிகளிலேயே இது ஒன்று தான். ஏன், வடமொழி, ஆங்கிலம் மற்றும் இதர மொழிகள் இதனுடன் இப்படிப் போட்டி போட முடியாதா என்ற கேள்வி எழுவது இயல்பே! இந்த மொழிகளிலும் இப்படிச் சுருங்கச் சொல்லும் வார்த்தைகள் உண்டு; சூத்திரங்கள் உண்டு. ஆனால் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைய வைக்கும் வேர்ச் சொற்களும் ஒரு சொல்லுக்கு ஏராளமான பொருள்களும் தமிழில் மட்டுமே உண்டு.
இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்!
ஒவ்வொரு சொல்லும் இனிமையானது; ஒவ்வொரு சொல்லும் அழகானது! இதுவே தமிழுக்கு உள்ள தனிச் சிறப்பு.
இதில் இரு சொற்களில் ஏராளமான கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அடக்கிக் காட்டியவர் கண்ணதாசன்! இது அவர் அப்பன், பாட்டன், முப்பாட்டனிடமிருந்து அவர் பெற்ற சொத்து! தமிழ்ச் சொத்து!
வள்ளுவனின் இரு சொல் விளையாட்டு
எடுத்துக் காட்டாக வள்ளுவரின் குறளை எடுத்துக் கொள்வோம். அவர் கடலை (கடல் போன்ற அளவு கருத்துக்களை) குறுக இரு சொற்களில் அடக்கிக் காட்டியவர்.
கற்கக் கசடற – குறள் 391
செய்க பொருளை – குறள் 759
என்னைமுன் நில்லன்மின் – குறள் 771
உண்ணற்க கள்ளை – குறள் 922
இருநோக்கு இவளுன்கண் – குறள் 1091
நினைத்தொன்று சொல்லாயோ – குறள் 1241
காண்கமன் கொண்கனை – குறள் 1265
வருகமன் கொண்கன் – குறள் 1266
பெரும் சிறப்புகளை அடக்கிய இந்த இரு சொல் காவியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன.
இளங்கோவடிகளின் இரு சொல் அறிவுரை
அடுத்து சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் காப்பிய முடிவில் மனித குலத்திற்கே மாபெரும் செய்தியைச் சுருக்கமாகச் சொல்கிறார் – இரு இரு சொற்களால்! இதை மிஞ்சிய அறவுரையை, அறிவுரையை யாரும் தர முடியாது.
வஞ்சிக் காண்டத்தில், வரந்தரு காதையில் 186 முதல் 202 முடிய உள்ள வரிகளைப் படித்தால் இளங்கோவடிகளின் அற்புத தவமும் தமிழின் சிறப்பும் புரியும், இதில் சில இரு சொற் ஓவியங்கள் இதோ:-
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்: தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகல்மின்; பொருள்மொழி நீங்கல்மின்;
அருமையான தமிழ் மொழியின் விந்தைகளை இரு சொற்களில் எப்படி பார்க்க முடிகிறது, பார்த்தீர்களா!
இப்படி தேவார திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம்,சங்க இலக்கியம், சமீப கால நூல்கள் போன்ற அனைத்திலுமே இந்த இரு சொல் விந்தை ஏராளம் உண்டு.
பாரதியாரின் இரு சொல் மந்திரம்
கடைசியாக மஹாகவி பாரதியார் இதில் ஆற்றிய விந்தைகள் ஏராளம் உண்டு; இடம் கருதி சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வாழிய செந்தமிழ்!
சுடரே போற்றி!
விதியே வாழி!
செய்க தவம்!
சாகாவரம் அருள்வாய்!
வந்தேமாதரம் என்போம்!
நெஞ்சு பொறுக்குதிலையே!
ஆயிரக் கணக்கில் இப்படி இரு சொல் ஓவியங்களைத் தமிழில் எடுக்க முடியும்; வேறு மொழிகளில் இனிமையும் நீர்மையும் கொண்டுள்ள உவமைகளைக் காண்பது அரிது!
கண்ணதாசனின் இரு சொல் திரை ஓவியங்கள்
இந்த பாரம்பரியத்தில் வந்த கண்ணதாசனுக்குக் காலம் கை கொடுத்தது; திரைப்படத் துறை மின்னி மின்னி முன்னேறும் பருவத்தில் அவர் பாடலாசிரியராக பல்வேறு வாழ்க்கை நிலைக் களன்களுக்காக பாடல் எழுத வேண்டிய சூழ்நிலையை இறைவன் உருவாக்கி இருந்தான்.
கலங்காதிரு மனமே என்ற இரு சொல் முத்திரையுடன் தன் காலடித் தடத்தை திரைப்படப் பாடல் துறையில் அவர் பதித்தார். இது தான் அவர் இயற்றிய முதல் திரைப்படப் பாடல்.கன்னியின் காதலி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்!
கலங்காதிரு மனமே! – நீ
கலங்காதிரு மனமே!  – உன்
கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே!
இனி பல சொல்லோவியங்களை இரு சொற்களில் படைத்து திரையுலகப் பாடல்களில் ஒரு தனி ஏற்றத்தைத் தந்த கண்ணதாசனின் பாடல்களைத் தொகுத்து அவற்றின் சிறப்பை எழுத ஒரு தனி நூல் தேவையாயிருக்கும் என்பதால் சில பாடல்களை மட்டும் இங்கே சுட்டிக் காட்டி முடிக்கலாம்! வாசகர்கள் அசை போட்டு அதன் சிறப்புகளை மனதில் ஏற்றி மகிழ முடியும்!
பாடலும் படமும்!
கங்கைக்கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம் –ஓ
கண்ணன் நடுவினிலே
காலை இளங்காற்று
பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே   – படம் : வானம்பாடி
அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே – ஆஹா!
வாழ்க்கை வாழ்வதற்கே   – படம்  வாழ்க்கை வாழ்வதற்கே
வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் இரண்டனா –
கடைசியில் துண்டனா     படம் பாமா விஜயம்
பாட்டுப் பாடவா
பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா
பறந்து செல்லவா       படம்  தேன்நிலவு
பேசுவது கிளியா – இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில்கொண்ட சிலையா
கொத்து மலர்க்கொடியா
பாடுவது கவியா – இல்லை
பாரிவள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா     படம் : பணத்தோட்டம்
கண்ணெதிரே தோன்றினாள்
கனிமுகத்தைக் காட்டினாள்
நேர்வழியில் மாற்றினாள்
நேற்றுவரை ஏமாற்றினாள்           படம்  இருவர் உள்ளம்
நீ என்பதென்ன
நான் என்பதென்ன                 படம் வெண்ணிற ஆடை
தோட்டத்து மாப்பிள்ளை
வீட்டைத் தேடிவந்தால்
சும்மா வரலாமா                   படம்   இதயத்தில் நீ
களங்கமில்லா காதலிலே
காண்போம் இயற்கையெலாம்          படம்   இல்லறஜோதி
பொன்னென்பேன் சிறு
பூவென்பேன் – காணும்
கண்ணெண்பேன் வேறு
என்னென்பேன்?!                  படம் போலீஸ்காரன் மகள்
kanna2
நூற்றுக்கணக்காக உள்ள இரு சொற்பாடல்களில் மேலே பத்தைப் பார்த்தோம்.
இவற்றில் நவரஸங்களும் ததும்பும்; உணர்ச்சிகள் பொங்கும்; தமிழ் சுருக்கமாக விளையாடும்; விரிவாக அர்த்தத்தைத் தரும்.
இவற்றைத் தொகுத்துப் பாடினாலே
வரும் சுகம்
இது நிஜம்!
மூன்று சொல் கவிதைகளுக்குள் மூழ்க வேண்டுமெனில் அது ஒரு கடல் அல்லவா! அங்கு முத்தும் பவழமும் சங்கும் – இன்னும் விலை மதிப்பில்லா மணிகள் அனைத்தும் அல்லவா கிடைக்கும்.
கவியரசின் அனுபவி ராஜா அனுபவி படத்தின் முத்தான வார்த்தைகள் நினைவுக்கு வருகிறதா –   முத்துக் குளிக்க வாரீகளா!!
Thanks Sri KSR